டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரகசிய பிரிவு தலைவர் விலகல்
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரகசிய பிரிவு தலைவர் விலகல்
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம்: ரகசிய பிரிவு தலைவர் விலகல்
ADDED : ஜூலை 23, 2024 08:39 PM

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக யுனைடட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீஸ்' (யு.எஸ்.எஸ்.எஸ்.,) எனப்படும் ரகசிய பிரிவின் மீது புகார் எழுந்ததையடுத்து அதன் தலைவர் கிம்பர்லி சீட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வரும் நவ.05 ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், 78, பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் என்ற இடத்தில் கடந்த 13ம் தேதி பிரசாரம் செய்து கொண்டிருந்த போது நடந்த துப்பாக்கி சூட்டில் காதில் காயங்களுடன் உயிர் தப்பினார்;
இசம்பவத்தை தொடர்ந்து டிரம்ப் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க ரகசிய பிரிவான யுனைடட் ஸ்டேட்ஸ் சீக்ரெட் சர்வீசின் கவனக்குறைவு காரணம் என புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அந்த பிரிவின் தலைவரான கிம்பர்லி சீட்டல், பாதுகாப்பு குறைபாட்டிற்கு தான் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.