Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/'டி-20' உலக கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா...

'டி-20' உலக கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா...

'டி-20' உலக கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா...

'டி-20' உலக கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா...

ADDED : ஜூன் 24, 2024 07:32 AM


Google News
Latest Tamil News
செயின்ட்லுாசியா: செயின்ட்லுாசியாவில் இன்று(ஜூன் 24) நடக்கும் 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு-1) இந்தியா, ஆஸ்திரேலியா மோதுகின்றன.

இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷாப், சூர்யகுமார், துபே, ஹர்திக் பாண்ட்யா அசத்துகின்றனர். பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மிரட்டுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று ஸ்டார்க் அணிக்கு திரும்பலாம். பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும்.

அரையிறுதிக்கு முன்னேற 'பிரிவு-1' ல் கடும் போட்டி நிலவுகிறது.

* இன்று ஆஸ்திரேலியாவை வென்றால், இந்தியா (6 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

* ஒருவேளை இன்று தோற்றால், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 புள்ளி பெறும். அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் (ஜூலை 25) மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

* இதில் ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளி பெறும். 'ரன்-ரேட்' அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

* மாறாக வங்கதேசம் வென்றால், ஆப்கன் வெளியேறும். இந்தியா, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.

* ஆஸ்திரேலியா தோற்று, ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us