Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

ADDED : செப் 23, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நியூயார்க்; கடந்த 1967ம் ஆண்டுக்கு பின், ஐ.நா., கூட்டங்களில் கலந்து கொள்ளும் முதல் சிரியா நாட்டு தலைவர் என்ற பெருமையை அஹமது அல் - ஷரா பெறுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொது சபை கூட்டத்தில் பங்கேற்க, மேற்காசிய நாடான சிரியாவின் அதிபர் அ ஹ மது அல் - ஷரா நியூயார்க் சென்றடைந்தார்.

ஐ.நா., பொது சபையில் கலந்துகொண்ட கடைசி சிரியா அதிபர் நுாரெட்டின் அல் - அடாசி ஆவார். அவர் கடந்த 1967ம் ஆண்டு ஜூன் மாதம் கலந்து கொண்டார். இதையடுத்து, ஆட்சியை கைப்பற்றிய பஷார் அல் - ஆசாத், நீண்டகாலம் சிரியாவில் ஆட்சி செய்த போதும், சர்வதேச சமூகத்திடம் இருந்து விலகியே இருந்தார்.

முன்னாள் பயங்கரவாதியான ஷரா, கடந்தாண்டு பஷார் அல் - ஆசாத்திடம் இருந்து சிரியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.

இதையடுத்து, கடந்த மே மாதம் சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். சிரியா மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us