ADDED : ஜூன் 10, 2025 01:36 AM
கேப் கெனவரல்: 'நாசா' மற்றும் இஸ்ரோ இணைந்து, 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் அமெரிக்காவிலிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று புறப்பட இருந்தனர்.
மோசமான வானிலை காரணமாக இத்திட்டம் இந்திய நேரப்படி நாளை மாலை 5:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.