Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/எஃகு இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்வு; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

எஃகு இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்வு; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

எஃகு இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்வு; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

எஃகு இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்வு; அறிவித்தார் அதிபர் டிரம்ப்

ADDED : மே 31, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்: அமெரிக்க எஃகுத் தொழிலை மேலும் பாதுகாக்க, எஃகு இறக்குமதி வரியை 25% லிருந்து 50% ஆக உயர்த்துவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பேரணியில், டொனால்டு டிரம்ப் பேசியதாவது: நாங்கள் 25 சதவீத உயர்வை விதிக்கப் போகிறோம். அமெரிக்காவில் எஃகு இறக்குமதி வரியை 25% லிருந்து 50% ஆக உயர்த்த போகிறோம். இது அமெரிக்காவில் எஃகுத் தொழிலை மேலும் பாதுகாக்கும்.

இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும், அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, ​​இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

எலான் மஸ்கை பாராட்டிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக ஆலோசனை வழங்கும் அமைப்பில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்தார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வழியனுப்புதலின் போது மஸ்க்கின் மிகச் சிறந்த திறமைகளை டிரம்ப் பாராட்டினார். இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: எலான் மஸ்க் அயராது உழைத்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாங்க சீர்திருத்த முயற்சியை வழிநடத்தியதற்காக மஸ்க்கிற்கு நன்றி.

அவர் தனது மிகச்சிறந்த திறமைகளை நமது தேசத்தின் சேவையில் ஈடுபடுத்த முன்வந்தார். அதை நாங்கள் பாராட்டுகிறோம்.இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்தோம். அது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us