Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,

11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,

11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,

11 ராணுவ வீரர்கள் மட்டுமே பலியாம்; புளுகுமூட்டையை அவிழ்த்து விடும் பாக்.,

Latest Tamil News
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலில், 11 ராணுவ வீரர்கள், 40 பொதுமக்கள் இறந்துள்ளதாக, அறிக்கை ஒன்றில் பாகிஸ்தான் நேற்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், கடந்த 7ம் தேதி முதல், 10ம் தேதி வரை, இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில், 11 ராணுவத்தினர், 40 அப்பாவி பொதுமக்கள் பலியாகிஉள்ளனர். இறந்தவர்களில், பாகிஸ் தான் ராணுவத்தின் ஸ்குவாடரன் லீடர் ஒருவரும் அடக்கம். இந்திய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஒன்றுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

ஆனால், நம் மத்திய அரசு 40க்கும் மேற்பட்ட பாக்., ராணுவ வீரர்களும், 100 பயங்கரவாதிகளும் கொல்லப் பட்டதை ஆதாரங்களுடன் நேற்று முன்தினம் வெளியிட்டது.

பாக்., ராணுவ தளங்கள் நாசம்


இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில், பலத்த சேதமடைந்துள்ள பாக்., ராணுவ கட்டடங்களின் படங்கள் நேற்று வெளியாயின. அமெரிக்காவின் தனியார் சாட்டிலைட் நிறுவனமான, 'மேக்ஸார் டெக்னாலஜிஸ்' நேற்று வெளியிட்ட படங்களில், இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலால் பலத்த சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளங்களின் கட்டடங்கள் காட்டப்பட்டுள்ளன.
ராவல்பிண்டி நகரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளமான நுர் கான், சிந்து பகுதியில் உள்ள சுக்குர், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள ரஹிம் யார் கான் தளங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதை அந்த படங்கள் காட்டுகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us