என்ன செய்தாலும் எனக்கு கிடைக்காது நோபல் பரிசு : டிரம்ப் ஆதங்கம்
என்ன செய்தாலும் எனக்கு கிடைக்காது நோபல் பரிசு : டிரம்ப் ஆதங்கம்
என்ன செய்தாலும் எனக்கு கிடைக்காது நோபல் பரிசு : டிரம்ப் ஆதங்கம்

கடும் கோபம்
இதுவரை டிரம்பின் நெருக்கமான ஆதரவாளர்களும், அவருடைய அமைச்சர்களில் சிலரும் தான், டிரம்பை நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி வந்தனர்.
விருந்து
அந்த ஆசாமியை அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார் டிரம்ப். கனடாவில் நடந்த, 'ஜி-7' மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறி, வெள்ளை மாளிகைக்கு திரும்பி, இந்த விருந்தை கொடுத்திருக்கிறார் டிரம்ப்.
பெரிய ஏமாற்றம்
தப்பித்தவறி மோடி அங்கு போயிருந்தால், இந்திய பிரதமரையும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியையும் தன் இரு பக்கமும் நிற்கவைத்து போட்டோ எடுத்து, இந்தியா - -பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்ற பொய்யை உண்மையாக்கி இருப்பார் டிரம்ப்.
நோபல் பரிசு
ஆனால் கொடுக்க மாட்டார்கள் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். உலகின் வேறு சில இடங்களில் நடந்த போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் உரிமை கொண்டாடுகிறார். அதில் எல்லாம் கூட ஓரளவு உண்மை இருக்கக் கூடும். ஆனால், இந்தியா- - பாக்., போரை பொறுத்தவரை, அவருக்கு எந்த பங்கும் போர் நிறுத்தத்தில் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய பிறகும், டிரம்ப் விடாப்பிடியாக அதை குறிப்பிடுவது, அவருடைய மன நிலை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.