Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

UPDATED : ஜூன் 14, 2025 07:11 PMADDED : ஜூன் 14, 2025 04:44 PM


Google News
Latest Tamil News
தெஹ்ரான்: ''இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிக்கொண்டே இருந்தால்,தெஹ்ரான் எரிந்துவிடும்' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், ஈரானை எச்சரித்தார்.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது. ஈரானில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு முக்கிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது ஏவுகணைகளை வீசிக்கொண்டே இருந்தால்,'ஈரான் தலைநகர் தெஹ்ரான் எரிந்துவிடும்' என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

ஈரான் சர்வதிகாரி, அந்நாட்டு மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரம் வந்துவிட்டது. குறிப்பாக தெஹ்ரானின் குடியிருப்பாளர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு செய்து வரும் தீங்கிற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இஸ்ரேலில் வசிக்கும் மக்களின் வீடுகள் மீது, தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினால் ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே இஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரின் எச்சரிக்கை இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் சம்பவங்கள் தொடரும் என்பதை எடுத்துரைக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us