ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு
ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு
ஒலிம்பிக்கை சீர்குலைக்க நாசவேலை: பாரிஸ் ரயில் தடங்களில் தீ வைப்பு

சிக்னல் சேதம்
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இதற்காக பாரிஸ் முழுதும் விழா கோலம் பூண்டுள்ளது. வார இறுதி நாள் என்பதால், பிரான்சை சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும், ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண மக்கள் பாரிஸ் வந்தவண்ணம் உள்ளனர். பாரிஸ் நகரத்தை, பிரான்ஸ் உடன் மட்டுமின்றி, பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் டி.ஜி.வி., என்ற அதிவேக ரயில்வே சேவை, அந்நாட்டில் முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது.

விசாரணை
இது குறித்து பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் கூறுகையில், ''ஒலிம்பிக் துவக்க விழாவையும், வார இறுதி நாட்களையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார். இந்த தாக்குதலுக்கு நாசவேலை காரணம் என தெரிய வந்தாலும், அதில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் சேவை பாதிப்பால் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.