கடனில் மூழ்கிய பாகிஸ்தான் கையேந்தி நிற்கிறது; ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு
கடனில் மூழ்கிய பாகிஸ்தான் கையேந்தி நிற்கிறது; ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு
கடனில் மூழ்கிய பாகிஸ்தான் கையேந்தி நிற்கிறது; ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு

நிதி நெருக்கடி!
இதில் இருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்கி உள்ளது. ஆனாலும் பாகிஸ்தானால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. ஏற்கனவே இரண்டு தவணைகள் வழங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட தவணைக்கு, ஐ.எம்.எப்., பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானில் மின்சாரம், சமையல் காஸ் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கான வரியும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரூ.41,170 கோடி
இதனை சமாளிக்க, சர்வதேச வணிக வங்கிகளிடமிருந்து நீண்ட கால கடன் ஏற்பாடுகள் மூலம் கூடுதலாக, 4.9 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பு படி ரூ.41,170 கோடி) கடன் வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் திட்டமிடல் செயலாளர் தலைமையில் நடந்த குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கையேந்தி நிற்கிறது!
ஒரு பக்கம் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து, ஊக்குவித்து, பாதுகாப்பு அளிப்பதாக, பாகிஸ்தான் கடும் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில், சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற்ற பாகிஸ்தான் தற்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.