Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு

110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு

110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு

110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு

ADDED : ஜூன் 19, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
யெரெவான்: இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்ததை அடுத்து, அங்கு சிக்கி தவித்த, 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே ஆறு நாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.

அடுத்தடுத்து சீறிப் பாயும் ஏவுகணைகளால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஈரான் மற்றும் அர்மேனியா நாட்டில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள், பஸ்கள் வாயிலாக அண்டை நாடான அர்மேனியாவின் தலைநகரம் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின், அங்கிருந்து சிறப்பு விமானம் வாயிலாக நேற்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த விமானம் இன்று காலை டில்லி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மீட்பிற்கு உதவிய ஈரான் மற்றும் அர்மேனியா நாடுகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அங்கிருக்கும் நம் துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.

*'ஆப்பரேஷன் சிந்து'







      Our Apps Available On




      Dinamalar

      Follow us