காதில் பேண்டேஜூடன் பிரசாரத்தில் டொனால்டு ட்ரம்ப்
காதில் பேண்டேஜூடன் பிரசாரத்தில் டொனால்டு ட்ரம்ப்
காதில் பேண்டேஜூடன் பிரசாரத்தில் டொனால்டு ட்ரம்ப்
UPDATED : ஜூலை 17, 2024 04:19 AM
ADDED : ஜூலை 16, 2024 11:33 PM

மில்வவூக்கி: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் காதில் பேண்டேஜூடன் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம் (ஜூலை 13) பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ட்ரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். காது பகுதியில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மில்வவூக்கி மாகாணத்தில் டிரம்ப் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது காதில் பேண்டேஜூடன் பொது மக்கள் முன் தோன்றினார். இப்பிரசாரத்தில் டிரம்ப் மகனும் பங்கேற்றார்.