சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க கடும் நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க கடும் நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க கடும் நடவடிக்கை எடுப்பேன்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

2 நாளில் அறிக்கை
முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார், எஸ்.பி., மற்றும் மற்ற அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரிக்கவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 நாளில் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு விழுப்புரத்தில் நடந்த கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டு, 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிவாரணம்
மெத்தனால் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் ஆலைகளை தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும், 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும்.