Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழிநடத்துவது யார்: கேட்கிறார் திருமாவளவன்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழிநடத்துவது யார்: கேட்கிறார் திருமாவளவன்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழிநடத்துவது யார்: கேட்கிறார் திருமாவளவன்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழிநடத்துவது யார்: கேட்கிறார் திருமாவளவன்

ADDED : ஜூன் 27, 2025 09:46 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்: '' தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை வழி நடத்தப்போது அமித்ஷாவா அல்லது பழனிசாமியா என்ற கேள்வி எழுகிறது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறினார்.

திருவள்ளூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்துவிட்டது. இனி ஏன் அ.தி.மு.க., தனியாக கூட்டணி அமைக்க போகிறது. தனி கூட்டணி அமைப்பது என்றால், அவசரமாக கூட்டணியை அமைத்து இருக்க மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் பொறுத்து இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ளது. ஆனால், ஓராண்டுக்கு முன்பே அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைத்துவிட்டது என கூறிவிட்டார்கள்.

என்ன அழுத்தமோ என்ன காரணமோ மிகவும் முன்கூட்டியே கூட்டணி அறிவிக்கும் நிலை அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுவிட்டது. பின்னணியை விளக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க., தலைவருக்கு தான் உண்டு.

பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஏன் சந்தித்தார் என தெரியாது. பா.ம.க.,வின் பிரச்னை குறித்து கருத்து சொல்லவிரும்பவில்லை. நாங்கள் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். தொடர்வோம்.

அ.தி.மு.க., பா.ஜ., முன்பு கூட்டணியில் இருந்ததாக அமித்ஷா கூறி வருகிறார். இக்கூட்டணியை தே.ஜ., கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் எனவும் அமித்ஷா சொல்கிறார். இதற்கு அ.தி.மு.க., தலைவர்கள் குறிப்பாக இ.பி.எஸ்., தான் விளக்கத்தை , தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பா.ஜ., தலைமையில் கூட்டணியா, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியா என்ற கேள்வி எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார். அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கலாம். அ.தி.மு.க., மூத்த தலைவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு உருவாக்கிய கூட்டணியை வழிநடத்துவது அமித்ஷாவா இ.பி.எஸ்., அவர்களா என கேள்வி எழுகிறது. இதற்கு எல்லம் அவர் தான் விளக்கம் சொல்ல வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us