Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்

உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்

உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்

உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்

ADDED : ஜூன் 27, 2025 09:44 PM


Google News
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக ஏழாம் ஆண்டு விழா, நேற்று துவங்கியது.

காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீ விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேய பெருமாளுக்கு, பல்வேறு திரவியங்களில் திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து, 8:30 மணிக்கு, பக்தர்கள், புற்றுக்கோவிலிருந்து பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின் ஸ்ரீ ரேணுகாதேவி தாயார் திருமஞ்சனம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடந்தது.

இன்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு ஹோமம், நவ கலச ஸ்தாபிதம், மூலவர் வேங்கடேசபெருமாள் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பின், சிறப்பு அலங்கார பூஜை மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us