சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நெருக்கடி
திருச்சியில் இந்த பேரணி நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றனர். ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் மேலிடத்தில் இருந்தும் அனுமதி வரவில்லை என்றார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்களை போலீசார் அகற்றினர். மற்ற கட்சி கொடிகள் இருக்கின்றன. போலீசுக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் இது ஒரு ஒரு வாய்ப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை மட்டும் அகற்றி உள்ளனர். இவ்வளவு நெருக்கடிகளை தாங்கி கொண்டு களத்தில் நிற்கிறோம்.
கொடியேற்ற முடியவில்லை. பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை.பேரணி நடத்த முடியவில்லை. மாநாடு நடத்த முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக இவ்வளவு நெருக்கடி உள்ளது. இவ்வளவு நெருக்கடியை தாண்டி நிற்கிறோம்.
எங்களின்அரசியல்
தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடும். எங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைக்கு வரப்போகுதா? என்ன செய்ய முடியும்? மத்திய அரசாலும் மாநில அரசாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எதற்காக யாருக்காக பயப்பட வேண்டும். எங்களுக்கு என்ன நெருக்கடி? எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்க பார்த்தாலும், நாங்களே மையமாக மாறுவோம். இது தான் எங்களின் அரசியல்.
தேசமே முதன்மை
சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், பவர் ஸ்டார் அனைவரும் தமிழகத்திற்குள் தான். அம்பேத்கர் இவர்களை தாண்டிய ஸ்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எந்தப் பக்கம் உள்ளனரோ அந்த பக்கம் தான் வெற்றி. ஆட்சி அதிகாரம். இதனை யதார்த்தத்காக சொல்கிறேன். தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தை பற்றி கவலைப்படுகிறது.