வைகை அணை முழு அளவான 71 அடியை எட்டியது
வைகை அணை முழு அளவான 71 அடியை எட்டியது
வைகை அணை முழு அளவான 71 அடியை எட்டியது
ADDED : ஜன 06, 2024 06:27 AM

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் இரு மாதங்களுக்கு பின் 2ம் முறையாக 70 அடியை கடந்து, இன்று முழு அளவான 71 அடியை எட்டியது.
வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் நவ., 9ல் அதிகபட்சமாக 70.51 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு உபரியாக வந்த நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
நவ., 10 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கும், நவ.23 முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டதால் டிச.,8ல் அணை நீர்மட்டம் 62.86 அடி வரை குறைந்தது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு 70.67 அடியானது. இந்நிலையில், இன்று, முழு அளவான 71 அடியை எட்டியது. இதனையடுத்து அணைக்கு வரும், 3,106 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகின்றது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில், வைகை கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.