Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்

தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்

தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்

தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்

UPDATED : ஜூன் 14, 2025 06:20 PMADDED : ஜூன் 14, 2025 03:51 PM


Google News
Latest Tamil News
சென்னை: '' தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது '', என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 100 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் இடம்பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது.


தி.மு.க., அரசு, இனியாவது தனது பொய் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us