யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்த தமிழக எம்.பி.,க்கள்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்த தமிழக எம்.பி.,க்கள்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்த தமிழக எம்.பி.,க்கள்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி

தன்னம்பிக்கை
காவல்துறை முதல் விளையாட்டு துறை வரை பெண்கள் தூள் கிளப்புகிறார்கள். நமது ஆட்சியில் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கிறோம். மகளிருக்காக புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம் என பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும், தனி நபர்களுக்கும் பார்த்துப் பார்த்து தி.மு.க., அரசு செய்து வருகிறது.
திமிராக பேசுகிறார்
சில தடைகள் இல்லை என்றால் தமிழகம் இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும். நேற்று பார்லிமென்டில் நடந்த நிகழ்ச்சி எல்லாம் நீங்கள் டிவியில் பார்த்து இருப்பீர்கள். மும்மொழி கொள்கையை, அதாவது ஹிந்தி, சமஸ்கிருதம் மொழியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதியை தருவோம் என்று திமிராக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகிறார்.
பிளாக் மெயில்
கல்வியை தனியார் மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துவது, சின்ன பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு என கல்வியில் மத்திய அரசின் அதிகாரத்திற்கு வழி வகுக்கிறது.
நாசக்கார திட்டம்
ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்த நாசகார திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என பேசிய தர்மேந்திர பிரதானை வார்த்தையை திரும்ப பெற வைத்து இருக்கிற தமிழக எம்.பிக்கள். எம்.பி.க்களுக்கு வாழ்த்துகள். 40 பேர் என்ன பண்ண போகிறார்கள் என்று கேட்டவர்களுக்கு நேற்று பதில் கிடைத்து இருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளுக் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்து இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.