கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்
கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்
கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்

எதிரான அலை இல்லை !
ஒட்டுமொத்தமாக பா.ஜ.,வின் கட்டுப்பாட்டிற்குள் அ.தி.மு.க., சென்றுள்ளது. அதனால் தான் அமித்ஷா அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தை எந்த ஷாவாலும் அசைக்க முடியாது. தமிழகத்தையும் பா.ஜ.,வின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இ.பி.எஸ்., துடிக்கிறார். டில்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான். தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு அலைதான் அதிகம் வீசுகிறது; எதிரான அலை இல்லை. ஆனால் சிலர் நம் மீது அவதூறு பரப்ப துடிக்கின்றனர். ஆதரவு அலையை மறைக்க சிலர் திசை திருப்ப பார்க்கின்றனர். 7 வது முறை வரலாறு காணாத வெற்றியை பெற்று திமுக ஆட்சியை பிடித்தது என்ற செய்தி வர வேண்டும். இதற்கென அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
திமுகவில் புதிதாக 2 அணிகள்
பொதுக்குழு துவங்கியதும் மறைந்த தலைவர்கள் மன்மோகன்சிங், விஜயகாந்த், குமரி ஆனந்தன், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன், பங்காரு அடிகளார், ஆம்ஸ்ட்ராங், மற்றும் காஷ்மீர் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திமுகவில் புதிதாக 2 அணிகள் துவக்க பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொண்ட கல்வியாளர்கள் திமுக அணி, மாற்றுத்திறனாளிகள் திமுக அணி என 2 அணிகள் துவக்கப்படும். என அறிவிக்கப்பட்டது.
27 தீர்மானங்கள்
கருணாநிதி பிறந்த நாள் ஜுன் 3 செம்மொழி நாளாக கொண்டாடுவது, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தல், கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு, 2026 தேர்தலில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்கிட உழைப்பது, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபடுதல், வக்ப் சட்ட திருத்தத்ததை திரும்ப பெற வலியுறுத்தல், நகை அடகு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்துவது,
சிறப்பு தீர்மானம் என்ன ?
ஓரணியில் தமிழ்நாடு என வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் பணியை வெற்றிகரமாக நடத்த திமுக நிர்வாகிகள் இறங்க வேண்டும். இதன்படி 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக்க வேண்டும் என்று ஒரு சிறப்பு தீர்மானத்தை கட்சி தலைவர் ஸ்டாலின் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் கரவொலி எழுப்ப நிறைவேற்றப்பட்டது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.