நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட்; இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 11) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (ஜூன் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திண்டுக்கல்
* தேனி
* திருவண்ணாமலை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு,
நாளை (ஜூன் 12)
மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
ரெட் அலெர்ட்
நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 14ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்
* திண்டுக்கல்
ஜூன் 15ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
ஜூன் 16ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.