Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது

ADDED : பிப் 11, 2024 12:11 AM


Google News
சென்னை:மாவட்ட கலெக்டர்களுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா அனுப்பிய சுற்றறிக்கை விபரம்:

ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.

ரேஷன் கார்டுதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்த கூடாது.

விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என்று, ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us