ADDED : பிப் 25, 2024 01:16 AM

சென்னை:ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நேற்று நடிகர் ரஜினி சந்தித்து பேசினார்.
சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வீட்டின் எதிரே, அவரது தோழி சசிகலா புதிதாக வீடு கட்டி உள்ளார்.
அந்த வீட்டில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடினார். வீடு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியாத ரஜினி, சசிகலா வீட்டிற்கு சென்றார்; அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''வீடு கோவில் மாதிரி உள்ளது. இந்த வீடு அவருக்கு பெயர், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தையும் கொடுக்க, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை,'' என்றார்.