கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது
கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது
கேரள சிறையில் தப்பிய கைதி காரைக்குடி காதலியுடன் கைது

10 கிலோ தங்கம் கடலில் வீச்சு
இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக, திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
சிறுமி, வாலிபர் மர்ம சாவு
தஞ்சாவூர் மாவட்டம், வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் திலீபன், 20, விவசாய கூலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த திலீபனின் தந்தை மதியழகன், 'அந்த பெண் உனக்கு தங்கை முறை; அவரை காதலிக்காதே' என கண்டித்துள்ளார். மீறி இருவரும் காதலித்துள்ளனர்.
ரூ.5,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
திருப்பூர் மாவட்டம், மூலனுாரைச் சேர்ந்தவர் சேகரன், 48; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்திற்கான பட்டாவை மாற்றம் செய்ய, மூலனுார் வி.ஏ.ஓ., சண்முகம், 45, என்பவரை அணுகினார். இதற்காக 5,000 ரூபாயை லஞ்சமாக சண்முகம் கேட்டார்.
இரும்பு கம்பியால் தாக்கி 60 பவுன், பணம் கொள்ளை வழக்கு: கைது 2
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இரும்பு ராடுடன் வீட்டிற்குள் புகுந்து 5 பேரை தலையில் தாக்கி, பீரோவில் இருந்த 60 பவுன், பணத்தை கொள்ளையடித்த இருவரை 28 நாட்களில் போலீசார் கைது செய்தனர். தேவகோட்டை அருகே தென்னீர்வயலில் பதுங்கியிருந்த அக்கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் 30, கணபதி 32, இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தாய் சித்ரவதை செய்த குழந்தைக்கு சிகிச்சை
சென்னை, மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கத்தை சேர்ந் தவர் ஸ்ரீதேவி- - -கனகராஜ் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம், 2 வயது மகன் தர்ஷன் கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பள்ளிக்கரணையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள் இருவர் கைது
சென்னை, முகப்பேர், வேணுகோபால் தெருவில், சவுண்டு சர்வீஸ் கடை ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை, இந்த கடைக்கு எதிரில், 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர், போதையில் தகராறில் ஈடுபட்டனர்.
நக்சலைட்கள் தாக்குதலில் இருவர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகமுள்ளது. இங்குள்ள காஹேர் துல்ஹத் கிராமத்தில் நேற்று நக்சலைட்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சமாஜ்வாதி பிரமுகர் வீட்டில் ரெய்டு
உத்தர பிரதேசத்தில், 750 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., வினய் ஷங்கர் திவாரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
திரிணமுல் நிர்வாகி கட்டடத்துக்கு தீ வைப்பு
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில், தலைமறைவாக உள்ள ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் சகோதரர் சிராஜுக்கு சொந்தமான கட்டடத்தை, அப்பகுதி மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம் நிலவியது.