தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா
தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா
தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா

தலை வணங்குகிறேன்
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: மதுரை மண்ணில் முதலில் மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி இந்த உரையை துவக்குகிறேன். சொக்கநாதருக்கும், கள்ளழகருக்கும், திருப்பரங்குன்றம் முருகனுக்கும் தலைவணங்கி மகிழ்கிறேன். தமிழகம் வந்து தமிழக மக்களை சந்திக்கும்போது, தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகம் மீதே
மதுரை மண் பல விதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். இந்த கூட்டமும் மாற்றத்தை உருவாக்கும். தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் என உங்களிடம் கூறுகிறேன். வரக்கூடிய 2026 சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அ.தி.மு.க., -பாஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் எந்த பகுதியில் இருந்தாலும் எனது சிந்தனை தமிழகம் மீது தான் உள்ளது.
மக்களின் நாடித்துடிப்பு
அமித் ஷாவினால் தி.மு.க., ஆட்சியை அகற்ற முடியாது என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அமித் ஷாவினால் முடியாது என சொல்வது சரிதான். ஆனால் தமிழக மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள். அதற்காக காத்துக் கொண்டு உள்ளார்கள். மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவனாக சொல்கிறேன் வரும் தேர்தலில் தி.மு.க.,வை தூக்கி எறிய மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.
பயங்கரவாதிகளுக்கு பாடம்
ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து மிகப்பெரிய ஆதரவுக் குரல் ஒலித்தது. பஹல்காமில் அப்பாவி பொது மக்களை , மதத்தின் பெயரால் கொன்ற பயங்கரவாதிகளை, முப்படையை திரட்டி, அவர்கள் மண்ணிலேயே பிரதமர் மோடி அழித்தார். இதுதான் அவர்களுக்கு நாம் அளித்த பாடம்.
தொடர்கிறது
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பேசும் இந்த நேரத்தில் இந்திய வான்வெளி சாதனையை சொல்ல வேண்டும். இந்த நாட்டின் இளைஞர்கள் காவிரி இன்ஜின் என்ற சொல்லை சொல்ல துவங்கி உள்ளனர். பாகிஸ்தான் ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் வீசியபோது, அனைத்தையும் அடித்து தூள் தூளாக்கி இந்திய ராணுவம், நமது வான் பாதுகாப்பை உலகத்திற்கு பறைசாற்றியது. ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. பயங்கரவாதிகள் மீண்டும் வாலாட்டினால், அவர்கள் வீடுகளுக்குள்ளேயே அழிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார்.
டில்லியை போல்
வரக்கூடிய சட்டசபை தேர்தல், ஒவ்வொரு தொண்டருக்கும் முக்கியமான, அவசியமான களமாகும். ஒடிசா மாநிலத்திலும் முழு மெஜாரிட்டி உடன் பா.ஜ., ஆட்சி அமைந்தது. ஹரியானாவிலும் மிகப்பெரிய வெற்றியுடன் 3வது முறையாக பதிவு செய்தோம். மஹாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பா.ஜ., பதிவு செய்துள்ளது.
ஊழலில்
ஆட்சியில் இருக்கும் தி.மு.க., ஊழலில் திளைத்துக் கொண்டு உள்ளது. ஏழை மக்களுக்காக மோடி அரசு கொடுக்கும் பணத்தை தி.மு.க., அரசு ஏழைகளுக்காக செலவிடாமல், அவர்களுக்கு நன்மை கிடைக்காமல் தடுத்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தாலும், வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டு உள்ள அச்சத்தாலும், வாழ முடியாமலும், மத்திய அரசு திட்டங்கள் கிடைக்காமலும் தவித்து கொண்டு உள்ளனர்.
தைரியம் இருந்தால்
தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ஊழல் செய்து சட்டவிரோதமாக ஊழல் ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு, 100க்கு 100 சதவீதம் தோல்வியடைந்த அரசாக காட்சி அளிக்கிறது. தி.மு.க., அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி பட்டியலை அளித்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல், 90 சதவீதம் நிறைவேற்றியதாக சொல்கின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், தேர்தல் வாக்குறுதி பட்டியலை பார்த்து எத்தனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என பார்த்து சொல்ல வேண்டும்.
கோரிக்கை
ஆயிரம் ஆண்டு கால பழமை உள்ள அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லக்கூடிய துணிச்சல் தி.மு.க.,அரசுக்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக முருக பக்தர்கள் வழிபட்டு வந்த இந்ததலத்தை அரசியல்லாபம் கருதி பிரினைவாதம் கருதி தி.மு.க., அரசு செயல்படுகிறது. 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு வலிமையையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டும்.
நன்றி சொன்னீர்களா
தமிழகத்தில் தமிழ் தமிழ் என பேசும் நீங்கள், பாட திட்டத்தை தமிழில் ஏன் கொண்டு வரவில்லை. உயர்கல்வியை தமிழில் கற்பிப்பதற்கு என்ன தடை உள்ளது பொறியியல் பாடத்திட்டம் தமிழில் இயற்றப்பட வேண்டும். தமிழின் மரபு சின்னமான, செங்கோலை நாட்டின் உயர்ந்த இடத்தில் மோடி கொண்டு சென்ற போது, நன்றி சொன்னீர்களா?
அதிக நிதி
மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 1.53 லட்சம் கோடி மட்டுமே கொடுத்தது. ஆனால், பா.ஜ., ஆட்சியில் 6.80 லட்சம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. சாலை மேம்பாட்டுக்காக ரூ.63 ஆயிரம் கோடியும், உள்கட்டமைப்புக்காக ரூ.73 ஆயிரம் கோடியும், விமானம் கட்டுவதற்கும் ரூ.3,500 கோடியும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.