Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!

கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!

கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!

கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!

ADDED : ஜூன் 16, 2025 01:05 PM


Google News
Latest Tamil News
சென்னை: நீலகிரி, கோவைக்கு இன்று (ஜூன் 16) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில், தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவைக்கு இன்று (ஜூன் 16) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தேனி, தென்காசி ஆகிய 2 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா மையங்கள் மூடல்!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி இன்று (ஜூன் 16) சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

1.தொட்டபெட்டா காட்சிமுனை

2.அவலாஞ்சி

3.எட்டாவது மைல் மற்றும் பைன் பாரஸ்ட்.

4.கேரன்ஹில்

மேலும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டிய காரணத்தால், ஒன்பதாம் மைல் ஷூட்டிங் பாயின்ட் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us