Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இனி இளநிலை பட்டப்படிப்புக்கு 40 வயதிலும் கல்லுாரியில் சேரலாம்

இனி இளநிலை பட்டப்படிப்புக்கு 40 வயதிலும் கல்லுாரியில் சேரலாம்

இனி இளநிலை பட்டப்படிப்புக்கு 40 வயதிலும் கல்லுாரியில் சேரலாம்

இனி இளநிலை பட்டப்படிப்புக்கு 40 வயதிலும் கல்லுாரியில் சேரலாம்

ADDED : அக் 01, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
சேலம் : தமிழக அரசு, அதன் உதவி பெறுபவை, சுயநிதி கலைக்கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, உச்ச வயது வரம்பு, 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 1,626 அரசு, அதன் உதவி பெறுபவை, சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. அவற்றில் இளநிலை பட்டப்படிப்புகளான பி.ஏ., -- பி.காம்., பி.எஸ்சி., - பி.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் சேர அதிகபட்ச வயது வரம்பு, 21 வரையும், எஸ்.சி., - எஸ்.டி., - மாற்றுத்திறனாளிகளுக்கு, வயது தளர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகபட்ச வயது வரம்பாக, 40 வரை தளர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி, கலைக்கல்லுாரிகளுக்கு, செப்., 28ல், அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு, அதன் உதவி பெறுபவை, சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உச்ச வயது வரம்பை தளர்வு செய்து, அரசாணை வெ ளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, 2025 - 26 கல்வியாண்டு முதல், கலை அறிவியல் கல்லுாரிகளில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அதிகபட்ச வயது வரம்பு, 40 ஆகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேலும், ஐந்து ஆண்டு தளர்வு செய்து, 45 ஆகவும், எஸ்.சி., - எஸ்.டி., - பி.சி., - எம்.பி.சி., - பெண் விண்ணப்பதாரர்களுக்கு, மூன்று ஆண்டு தளர்வு செய்து, 43 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனால் கல்லுாரி முதல்வர்கள், இந்த அரசாணையை பின்பற்றி, மாணவர் சேர்க்கை வயது வரம்பை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us