விசா தேவையில்லை: 6 அரபு நாட்டு மக்களுக்கு பிரிட்டன் அறிவித்த அதிரடி ஆபர்
விசா தேவையில்லை: 6 அரபு நாட்டு மக்களுக்கு பிரிட்டன் அறிவித்த அதிரடி ஆபர்
விசா தேவையில்லை: 6 அரபு நாட்டு மக்களுக்கு பிரிட்டன் அறிவித்த அதிரடி ஆபர்
ADDED : ஜன 03, 2024 10:58 AM

லண்டன்: ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் ஆகிய நாட்டினர் விசா இல்லாமல் பிரிட்டனுக்கு பிப்., 22ம் தேதிக்கு பின் செல்லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விமான டிக்கெட்டுடன், ஒருவர் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அந்நாட்டு அரசு வழங்கும் அனுமதியான விசாவும் அவசியம். இதற்காக பல ஆயிரங்கள், லட்சங்களை செலவு செய்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். சுற்றுலா, வேலை, கல்வி, ஆன்மீக யாத்திரை என பெயர்களில் விசா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் ஆகிய நாட்டினர் விசா இல்லாமல் பிரிட்டனுக்கு பிப்., 22ம் தேதிக்கு பின் செல்லாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் பிரிட்டன் எல்லையில் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக பிரிட்டன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.