Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

ADDED : செப் 01, 2025 05:11 AM


Google News
சென்னை:தேசிய திறந்த நிலை பள்ளியில், அடுத்த கல்வி யாண்டு முதல், விளையாட்டு வீரர்களுக்காக புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மத்திய கல்வித்துறையின் கீழ் இயங்கும், தேசிய திறந்த நிலை பள்ளியில், ஆரம்ப கல்வி, எட்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், விளையாட்டில் ஆர்வமிருந்து, பள்ளியின் அன்றாட பாடங்களில் கவனம் செலுத்த முடியாத மாணவ - மாணவி யருக்காக, அடுத்த கல்வியாண்டு முதல், விளையாட்டு தொடர்பாக ஐந்து புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பில், யோகா, உணவு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை ஆகிய மூன்று பாடங்களும், பிளஸ் 2 வகுப்பில் யோகா அறிவியல், விளையாட்டு மேலாண்மை என்ற இரண்டு பாடங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us