தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?

பில் பத்திரம்
வீடு, நிலம், கார், பைக் வாங்கும் போது, உரிமை ஆவணம் வாங்குகிறோம். அதே போல், தங்க நகைக்கான ஒரே ஆதாரமான பில்லை, பத்திரப்படுத்துவது அவசியம். பில் வாங்கினால் உங்களுக்கு ஆதாரம் கிடைக்கும்; அரசுக்கு வரி கிடைக்கும். தங்க கடத்தல் நிற்கும். ஆதாரமின்றி தங்கம் விற்க முடியாத நிலையில், நகைக்கான கொலை, திருட்டுகள் குறையும். நகை திருட்டு போனால், இன்சூரன்ஸ் பெறலாம்.
சான்று கட்டாயம்
தற்போது மதிப்பீட்டாளர் அடகு வைக்கும் போது, நகையை பரிசோதித்த பின்னரே கடன் தருகிறார். இருப்பினும், நகையை திருப்பும் போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
அபராதம்
ஏலத்தின் போது, ஏலத் தொகையில் அனைத்து செலவுகள் போக மீதித்தொகை, நுகர்வோரிடம் வழங்கப்படும். தற்போது ஏலத்துக்கு பின் நுகர்வோருக்கு ஒன்றும் கிடைக்காது. பல தனியார் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வங்கிகள், அடகு கடைகள் நகை ஏலத்தில் தான் பெரும் லாபம் பெறுகின்றனர். ஏல மோசடி இனி இருக்காது. புதிய விதிப்படி, பணம் செலுத்திய பின், நகையை வழங்காமல், ஏழு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தினால், தினமும் 5,000 ரூபாய் தர வேண்டும். இவ்வாறு கூறினார்.
குறிப்பு
எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி., என்பது மத்திய அரசின் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.,) மற்றும் சுவிட்சர்லாந்து எஸ்.ஏ., புரோடிட்ஸ் ஆர்டிஸ்டிக்ஸ் மெட்டாக்ஸ் பிரீசியூ (பி.ஏ.எம்.பி.,) ஆகியவை இடையேயான கூட்டு முயற்சியாக துவங்கப்பட்ட நிறுவனம்.