அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!
அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!
அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!

இரட்டிப்பாகும் விண்ணப்பம்
இந்தாண்டு கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் பிரிட்டனில் படிப்பதற்கே 90 சதவீதம் பேர் விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் கல்லுாரியில் சேர 2 முறை விண்ணப்பிக்கலாம். ஜனவரியில் துவங்கும் படிப்புக்கு செப்டம்பர் முதலும், ஜூலையில் துவங்கும் படிப்புக்கு பிப்ரவரி முதலும் விண்ணப்பிக்கலாம். அவ்வகையில் இந்தாண்டு ஜனவரி முதல் மே வரை 200 விண்ணப்பங்களை தாண்டிவிட்டது.
மொழித்திறன் தேர்வு
வெளிநாடுகளில் கல்வி கற்க செல்வோர் நுழைவுத் தேர்வு போல ஐலெட்ஸ் (IELDS) என்ற ஆங்கில மொழித்திறன் தேர்வை எழுதுவது அவசியம். பிரிட்டனுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உள்ளது. இதில் தென்மாவட்டத்தினரைத் தவிர, சென்னையை சுற்றியுள்ள பகுதியினரே எளிதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் ஆங்கில மொழித்திறனுக்கு, நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.