Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

ADDED : ஜூன் 22, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி:

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை தான் தமிழக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்துகிறது.

தி.மு.க., தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறது. அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. சுகாதாரத் துறையில் மத்திய அரசு தரும் நிதியில் இன்னும் 30 பணியிடங்களை நிரந்தரப்படுத்தாமல் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் உள்ளது. கூட்டணியில் தொடர்வோம் என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுகிறார். ஆனால், அதிக இடங்களை கேட்போம் என்கிறார்.

அதையேதான் கம்யூ., கட்சிகளும் சொல்கின்றன. அப்படியென்றால், அங்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்றுதான் அர்த்தம். கூட்டணியில் தொடருவோம் என்று சொல்லும் திருமாவளவன், இம்முறை இரு சீட்களை மட்டும் ஒதுக்கினால், வாங்கிக் கொண்டு கூட்டணியைத் தொடருவாரா?

இதையெல்லாம் வைத்துத்தான், பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு என சொல்கிறேன். தமிழக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்காமல், பா.ஜ., குறித்து பேசி, மக்களை தி.மு.க.,வினர் திசைதிருப்பப் பார்க்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us