Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு

இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு

இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு

இரண்டு வாரங்களில் ஆஜராக எம்.எல்.ஏ. மகனுக்கு உத்தரவு

ADDED : ஜன 25, 2024 01:02 AM


Google News
சென்னை:வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வின் மகன், மருமகள், இரண்டு வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ. இவரது வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, ஆன்ட்ரோ, அவரது மனைவி மார்லினா ஆகியோருக்கு எதிராக, நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஆதிதிராவிடருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

தாங்கள் சரண் அடையும் நாளில், தாக்கல் செய்யும் ஜாமின் மனுவை அன்றே பரிசீலிக்கும்படி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து வழக்குகளிலும், வழக்கமாக பிறப்பிக்கும் உத்தரவை பிறப்பிக்க முடியாது. இரண்டு வாரங்களில், சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரர்கள் ஆஜராக வேண்டும்.

சட்டத்தில் கூறியபடி, பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரை சார்ந்தவருக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, அவர்கள் தரப்பை கேட்டு, தகுதி அடிப்படையில் விரைந்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மகிழ்ச்சியாக இருந்தார்!'சிசிடிவி' பதிவு வெளியீடு'


எங்கள் வீட்டில், இளம் பெண் மகிழ்ச்சியாகவே இருந்தார்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் தரப்பு அடுத்தடுத்து, வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறது.இளம் பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், எம்.எல்.ஏ.,வின் மகன் ஆன்ட்ரோ, மருமகள் மார்லினா ஆகியோர் அடுத்தடுத்து, 'சிசிடிவி' பதவிகளை வெளியிட்டு வருகின்றனர்.
முதலில், இளம் பெண் தங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக பாட்டுபாடி ஆட்டம் போட்ட பதிவை வெளியிட்டனர்.அதற்கு அடுத்ததாக, நாங்கள் இளம் பெண்ணை அடித்ததாக கூறும் நாட்களில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, ஏற்காடு நட்சத்திர ஓட்டலில் இருந்தோம். எங்களுடன் அந்த இளம் பெண்ணும் மகிழ்ச்சியாகவே இருந்தார் என்பதற்கான ஆதாரம் என, 'சிசிடிவி' பதிவை நேற்று வெளியிட்டனர். இவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us