Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

ADDED : ஜன 11, 2024 06:54 PM


Google News
Latest Tamil News
திருப்பாவை - பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம்பெறு சன்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

திருப்பள்ளியெழுச்சி - பாடல் 7

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்இது அவன் திருவுரு இவன் அவன் எனவேஎங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்திருப்பெருந்துறை மன்னா!எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பொருள்: தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தர கோசமங்கை தலத்தில் எழுந்தருளியே சிவனே! திருப் பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. 'உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ?' என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, 'இதோ, என் நிஜ வடிவம் இதுவே' எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us