நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பேன்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சந்தேகம்
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என என்னென்ன திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால் அது எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்த சில மாநில கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில் சில திட்டங்கள் அறிவித்துள்ளனர்.
கேள்வி
தமிழகம் இரண்டு பேரிடர்களை சந்தித்துள்ளது. ரூ.37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டோம். இதுவரை ரூ.276 கோடி தான் கொடுத்துள்ளனர். அது சட்டப்படி வரவேண்டிய தொகை தான். பேரிடர் பாதிப்புகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் பார்வையிட்டு சென்றனர். இப்படித் தான் தமிழக மக்களை பா.ஜ., மதிக்கிறதா என்பது எனது கேள்வி
இல்லை
தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்களை அறிவிக்கவில்லை. பா.ஜ.,வை தாங்கி பிடிக்கும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களை நிதியமைச்சர் மறந்துவிட்டார்.
போராடுவோம்
வரும் 27 ம் தேதி நிடி ஆயோக் கூட்டம் நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க திட்டமிட்டு தயாராகி கொண்டு இருந்தேன். பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளேன். புறக்கணிக்க போகிறேன். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது தான் சரி. தமிழகத்தின் உரிமைகள், தேவைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.