திருப்பத்தூர் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
திருப்பத்தூர் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்
திருப்பத்தூர் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்

திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட கலெக்டர்
சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து திருப்பத்தூரில் பள்ளிகள் நாளை முதல் மூன்று நாட்கள் வரையில் எந்த விதமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சிறுத்தையை பிடிக்க மருத்துவ குழு
கார் பார்க்கிங் பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தர்மபுரியில் இருந்து சுகுமார் என்ற மருத்துவரும், வண்டலூரில் இருந்து ஸ்ரீதர் என்ற மருத்துவரையும் வனத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்து உள்ளார். மேலும்சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளது.
காருக்குள் சிக்கிய 5பேர் மீட்பு
சிறுத்தை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், சிறுத்தை பதுங்கி இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் காருக்குள் சிக்கிய 5 பேரை மீட்பு ஏணி மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறாமல் இருப்பதற்காக வன துறையினர் பார்க் சுற்றிலும் வலை கட்டி உள்ளனர்.