கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பாலம் கட்டுமான பணிகள் இடுக்கி எம்.பி., துவக்கி வைத்தார்
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பாலம் கட்டுமான பணிகள் இடுக்கி எம்.பி., துவக்கி வைத்தார்
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நேரியமங்கலம் பாலம் கட்டுமான பணிகள் இடுக்கி எம்.பி., துவக்கி வைத்தார்

பழமையான பாலம்
ஆங்கிலேயர் காலத்தில் வர்த்தக ரீதியாக மூணாறில் இருந்து கல்லார், மாங்குளம், ஆனக்குளம், பூயம்குட்டி வழியாக ஆலுவாவுக்கு போக்குவரத்து இருந்தது. மூணாறில் 1924ல் பெய்த மழை கடும் பேரழிவை ஏற்படுத்தியது. அதில் மூணாறு, ஆலுவா ரோடு சீரமைக்க இயலாத வகையில் சேதமடைந்தது. அதன் பின் தற்போதுள்ள கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறு, ஆலுவா ரோடாக உருவானது. அப்போது நேரிய மங்கலம் பகுதியில் பெரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் 1924ல் திருவிதாங்கூர் அரசி சேதுலட்சுமிபாய் ஆட்சியில் துவங்கி ஸ்ரீ சித்திர திருநாள் ராமவர்மா ஆட்சி காலத்தில் 1935 மார்ச் 2ல் பயன்பாட்டிற்கு வந்தது.
சிறப்பு
இந்த பாலம் தென்னிந்தியாவில் 'ஆர்ச்' வடிவில் கட்டப்பட்ட முதல் பாலமாகும். இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு நுழைவு பகுதியாக பாலம் உள்ளதால் 'ஹைரேஞ்ச் நுழைவு வாயில்' எனவும் அழைக்கப்படுகிறது.


