கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம்: காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்

தமிழக காங்., தலைவர் செல்வ பெருந்தகை
சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல அங்கு செல்கிறோம். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அதிகமானோர் கள்ளச்சாராயத்தால் பலியாகினர். ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
கள்ளச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ., எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
பாமக தலைவர் அன்புமணி
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் சாராய வியாபாரிகளுக்கு திமுக கொடுத்த ஆதரவுதான்.
சீமான், நாம் தமிழர் கட்சி
கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை கண் துடைப்பு நாடகம்; 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுலையில் உள்ள நிலையில் கைதானவர் தொடர்ந்து சாராயம் விற்றது எப்படி? காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டுமென்றும், இனியும் இதுபோன்று மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.