சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்
சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்
சட்டசபையில் அமளி: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்


தவிர்க்க முடியாத காரணம்
பிறகு அவை முன்னவர் துரைமுருகன் கூறியதாவது: சட்டசபை கேள்வி நேரம் முடிந்த பிறகே விவாதிக்க முடியும். விதிகளுக்கு உட்பட்டும் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். விதிகள் தெரிந்தும் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எந்த பிரச்னையாக இருந்தாலும் நேரமில்லாத நேரத்தில் தான் விவாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நீக்கம்
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை. மாண்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் வெளியேற்றப்பட்டனர். அமளியில் ஈடுபட்டோர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றார்.
வெளிநடப்பு
பிறகு, கள்ளச்சாராய பலி தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தது. அப்போது, பாமக, பாஜ, எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.