Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நோயாளி போல் சென்று மருத்துவமனையில் ஆய்வு; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

நோயாளி போல் சென்று மருத்துவமனையில் ஆய்வு; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

நோயாளி போல் சென்று மருத்துவமனையில் ஆய்வு; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

நோயாளி போல் சென்று மருத்துவமனையில் ஆய்வு; கலெக்டருக்கு குவியும் பாராட்டு

ADDED : செப் 17, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப கட்டுபாடு செய்து கொண்ட பெண் ஒருவர், அந்த மருத்துவமனையில் முறையான பராமரிப்பில்லாததால், தான் அவதியுறுவதாக பெரம்பலுார் கலெக்டர்மிருணாளினிக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம் புகார் செய்தார்.

இதையடுத்து அன்றிரவு, சாதாரண உடையில், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கலெக்டர்மிருணாளினி சென்றார். அங்கிருந்த நர்சிடம், தனக்கு உடல் நலக்குறைவு என கூறியுள்ளார். உடலை பரிசோதிக்காமல் ஊசி போட வந்த நர்ஸிடம், 'டாக்டர் இல்லையா... எங்கே?' என கேட்டு, கலெக்டர் கடிந்து கொண்டார். இதன்பின் தான், வந்திருப்பது கலெக்டர்என உணர்ந்த நர்ஸ்கள் திகைத்தனர்.

அங்கு, மருத்துவ பதிவேடுகள் எதுவும் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததை கண்டறிந்தகலெக்டர், நர்ஸ்கள் மீதும், பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் மீதும்,துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த செயல், பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us