Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளை மூட வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளை மூட வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளை மூட வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளை மூட வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ADDED : ஜூன் 22, 2025 03:42 AM


Google News
மதுரை: துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளை மூட உத்தரவிட தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கோவில்பட்டி சின்ராஜ் தாக்கல் செய்த மனு: துாத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள், குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட காற்றாலைகளை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட தனிநபர்கள், விவசாய நில உரிமையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்று வழங்க வேண்டும். காற்றாலைகளில் நிறுவப்பட்டுள்ள இறக்கைளால் (டர்பைன்ஸ்) ஒலி மாசுபடுகிறது.

இம்மாவட்டத்திலுள்ள அனைத்து காற்றாலைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமை செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பு: நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டப்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து காற்றாலைகள் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: காற்றாலைகள் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யும் பிரிவின் கீழ் வருகின்றன. இவ்வழக்கு அடிப்படையில் காற்றாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்க இயலாது. ஏதேனும் கடும் மாசு அல்லது விதிமீறல்கள் ஏற்பட்டால் சட்ட விதிகளின்படி மனுதாரர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுக உரிமை உண்டு. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us