Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வணிகர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க உதவி மையங்கள் துவக்கம்

வணிகர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க உதவி மையங்கள் துவக்கம்

வணிகர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க உதவி மையங்கள் துவக்கம்

வணிகர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க உதவி மையங்கள் துவக்கம்

ADDED : ஜூன் 24, 2025 05:45 AM


Google News
சென்னை: தமிழக வணிகர் நல வாரியத்தில் 1 லட்சம் புதிய வணிகர்களை சேர்க்க, 338 வரி விதிப்பு அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக வணிகர் நலவாரியம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராகும் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இம்மாதம் 1ம் தேதி முதல் வரும் நவ., 30 வரை ஆறு மாதங்களுக்கு, உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய் கிடையாது என, அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, 88,849 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இந்த கட்டண சலுகை வாயிலாக, மேலும் 1 லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜி.எஸ்.டி., சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்களில் ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்வோர், வாரிய உறுப்பினராகலாம். இதற்கு, வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்; பலருக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரியவில்லை.

இதனால், கடந்த 20ம் தேதி வரை, 682 பேர் மட்டும் உறுப்பினராகி உள்ளனர். எனவே, வணிகர்களுக்கு உதவுவதற்காக, 338 வரி விதிப்பு அலுவலகங்களிலும் உதவி மையங்களை, வணிகவரி துறை துவக்கியுள்ளது. அங்கு, ஆதார் கார்டு, ஜி.எஸ்.டி., பதிவு சான்று எடுத்துச் செல்ல வேண்டும். இந்த சான்று இல்லாதவர்கள், உள்ளாட்சிகளிடம் பெற்ற தொழில் உரிம சான்றுடன் சென்றால், உறுப்பினராக பதிவு செய்து தரப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us