தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
ADDED : செப் 20, 2025 01:34 PM

சென்னை: நீலகிரி, தேனி உட்பட 8 மாவட்டங்களில் இன்று (செப் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில், ஒரு சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில், செப். 25 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (செப் 20 ) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* ஈரோடு
* தேனி
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தருமபுரி
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும. சில இடங்களில், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.