இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : செப் 18, 2025 02:27 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 18) 21 மாவட்டங்களிலும்ல நாளை (செப் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* கிருஷ்ணகிரி,
* தருமபுரி,
* சேலம்,
* திருவண்ணாமலை,
* திருப்பத்தூர்,
* வேலூர்,
* ராணிப்பேட்டை,
* செங்கல்பட்டு,
* காஞ்சிபுரம்,
* கள்ளக்குறிச்சி,
* விழுப்புரம்,
* கடலூர்,
* பெரம்பலூர்,
* அரியலூர்,
* திருச்சி,
* சிவகங்கை,
* புதுக்கோட்டை,
* மயிலாடுதுறை,
* தஞ்சாவூர்,
* திருவாரூர்,
* நாகப்பட்டினம்
ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்., 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* ஈரோடு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.