வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்
வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்
வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசு ஏற்கும்: முதல்வர்
UPDATED : ஆக 02, 2024 12:40 PM
ADDED : ஆக 02, 2024 12:20 PM

சென்னை: வெளிநாடுகளில் படிக்க முதல்முறையாக செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நடப்பாண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17 சதவீதம் அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு முதல்முறையாக படிக்கச் செல்லும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.