முடிவடையும் கவர்னர் ரவியின் பதவிக்காலம்: நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?
முடிவடையும் கவர்னர் ரவியின் பதவிக்காலம்: நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?
முடிவடையும் கவர்னர் ரவியின் பதவிக்காலம்: நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?
UPDATED : ஜூலை 19, 2024 01:41 PM
ADDED : ஜூலை 19, 2024 11:56 AM

சென்னை: தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் மேகாலயா கவர்னர் பொறுப்பையும் (டிசம்பர் 18, 2019 முதல் ஜனவரி 26, 2020 வரை) சேர்த்து கவனித்து வந்தார். நாகாலாந்து கவர்னராக இருந்த ரவியை, தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார். 2021ம் ஆண்டு முதல் தமிழக கவர்னராக மாற்றப்பட்டு, தற்போது வரை நீடித்து வருகிறார்.
கவர்னருக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆர்.என்.ரவி கவர்னராக 2019, ஆகஸ்டில் பொறுப்பேற்ற நிலையில், வரும் ஜூலை 31ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், கவர்னர் ரவியின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மத்திய அரசு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டில்லி சென்ற ரவி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார்.