அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்
ADDED : ஜூன் 27, 2025 07:23 AM
திருச்சி: திருச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசின் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்குமாறு கட்டாயப்படுத்துகிறது
மத்திய அரசின், இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து, ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது
சமஸ்கிருதத்துக்கு அதீத நிதியும், வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிகக் குறைவான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது
ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் டயாலிசிஸ் சிகிச்சை செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தரமான சிகிச்சை கிடைக்காமல் போகும். தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.