மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
ADDED : மார் 26, 2025 03:02 PM

சென்னை: அ.தி.மு.க., அமைப்புச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ். அறிக்கை:
அனைவராலும் 'கானா' என்று பாசத்தோடு அழைப்பவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருங்கிப் பழகியவரும், ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவருமான கருப்பசாமி பாண்டியன் அவர்கள், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர். 1998ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.
கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்து வாடும், அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான
வி.கே.பி. சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.