உருதுவை திணிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்
உருதுவை திணிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்
உருதுவை திணிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்

திமுக சார்ந்த அரசியல்
பா.ஜ.,வை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நீட்டை எதிர்க்கின்றனர். நீட் குறித்து கருத்து சொல்ல நடிகர் விஜய்க்கு உரிமை உண்டு. அவர் ஒன்றிய அரசு என பேசுவது, திமுக சார்ந்த அரசியலை கையில் எடுப்பது போல் உள்ளது. திமுக.,வின் அரசியலை அனைவரும் கையில் எடுத்தால் எங்கள் கட்சி தனித்திருக்கும்; அது எங்களுக்கு சந்தோஷம் தான்; எங்கள் கட்சி வளர்ச்சிக்கு அது உதவும்.
அதிமுக
தமிழகத்தில் அவர் நாமம் வாழ்க, இவர் நாமம் வாழ்க எனக் கூறிக்கொண்டு பாதி பேர் சுற்றி வருகின்றனர். அவர்களால் தான் இந்த அரசியலுக்கு பீடை பிடித்துள்ளது. 1980, 90களில் தலைவர்களுக்கு போட்ட ஓட்டை வாங்கி இன்னும் அதிமுக என்ற கட்சி உயிரோடு இருக்கிறது. அக்கட்சியின் அழிவுக்கு முதல் காரணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
வெளிநாட்டில் படிப்பு
எனக்கு படிக்க பிடித்திருப்பதால் வெளிநாட்டில் படிக்க போகிறேன். அரசியலில் இருக்கும்போது உங்களை மெருக்கேற்றிக்கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. பா.ஜ.,வில் அண்ணாமலை சென்றுவிட்டால், வேறு யாரோ ஒருவர் என்னைவிட சிறப்பாக செய்யதான் போகிறார். நான் சென்றுவிட்டால், அதிமுக இழந்த இடத்தை பிடித்துவிடலாம் என்பதெல்லாம் பகல் கனவு.
ஆர்.எஸ்.பாரதி
கள்ளச்சாராய விவகாரத்தில் என் மீது அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதனை வரும் ஜூலை 9ல் வழக்காக பதிவு செய்ய உள்ளேன். அதுமட்டுமல்லாமல் நாய் கூட பி.ஏ பட்டம் பெறுவதாக பேசியுள்ளார். தேர்வு எழுதாமல் ஸ்டாலின், உதயநிதியை போல பட்டம் வாங்குவதாக நினைத்துவிட்டார். திமுக என்ற கட்சியே சரியில்லை. மேயரை மாற்றிவிட்டால் என்ன ஆகப்போகிறது?. எல்லா மேயரையும் நீக்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.