ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 29, 2024 12:16 AM

ராமேஸ்வரம் : தொடர் விடுமுறையால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
நேற்று பல்வேறு வாகனங்களில் வந்த பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.
வாகனங்கள் அதிகரிப்பால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் அக்னி தீர்த்தம் கடற்கரை வரை, நான்கு ரதவீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தனுஷ்கோடி அரிச்சல் முனையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு போதிய பார்க்கிங் வசதியின்றி வாகனங்களை அவர்கள் கண்டபடி நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.